புலத்துக் காண்டம். |
இந்தவோர் பொழுதும் வையத் |
குறிப்பு: மகேஸ்-யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளை நாடாளுமன்றத்தில் சொல்வேன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், சொல்லிய மறுநாள் கொல்லப்பட்ட மகேஸ்வரன்.
புலத்துக் காண்டம். |
இந்தவோர் பொழுதும் வையத் |
குறிப்பு: மகேஸ்-யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளை நாடாளுமன்றத்தில் சொல்வேன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், சொல்லிய மறுநாள் கொல்லப்பட்ட மகேஸ்வரன்.
மண்ணின் வயம் ஏற்பட்ட கண்ணீரின் கோடுகளை மறைய முன்னம் எழுதும் பணியே இது.
ஈழ காவியத்திற்குத் தொடக்கம்-உதாரணம் சிலப்பதிகாரம்-முடிவு இருக்க வேண்டும் என்று சிலர் கருத்துப் பகர்ந்நததினால் அப்படியான ஒரு உள்நோக்கம் கொண்ட ஒரு பதிலைத்தான் தந்தேன். பிழைகள் திருத்தப்படும். உங்கள் கருத்துக்கள் சிறந்தவை. இந்த எனது வெளிப்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ன வரைமுறைகளுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான உங்கள் கருத்தை ஈழநேசனுக்கு எழுதுங்கள். உங்கள் கருத்து என்னை சரிப்படுத்தும்
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.இவற்றுள் நளவெண்பா அடங்கவில்லை.
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்ததெனினும் நீங்கள்சொல்வதுபோல் இது மட்டுமே தமிழ் வெண்பா அல்ல.. குறள் வெண்பா,
சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா,இன்னிசை வெண்பா,சவலை வெண்பா என்று பல வகை வெண்பாக்கள் உண்டு.
இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. ஆனால் வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன.
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படுகிறது..தேமா,புளிமா,கருவிளம்,கூவிளத்தைவிடவும் காய்ச்சீரில் நாலசைவென்று ஒன்று உண்டு,எது தமிழ் காப்பியங்கள் என்று உங்களால் அறியமுடியவில்லை என்பதுவருத்தம் தருகிறது.
வெறும் புலம்பல்களினால் ஆன உங்களின் பாக்கள் இன்னமும் பலவற்றைத்தொட வேண்டும். அதற்கு இன்னமும் நீங்கள் அறிந்துகொள்ளப் பலவுண்டு என்பதை நான் வருத்ததோடு குறிப்பிட்டேயாகவேண்டும்.