குறைசொல்லி மனசுகள்
பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக
நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து
வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும்
மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம்
இப்போதும் இருக்கிறது.
அதே தளராத உறுதி.
அதே உழைப்புக்கான ஊக்கம்.
அதே தன்னலமற்ற தியாகம்.
நளவெண்பா மட்டும் வெண்பாக்களி்னால் ஆனது. ஈழகாவியத்திற்கு ஒரு தொடக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மை. அது கிறிஸ்துவுக்கு முன் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் அறிவேன். இன்றைய பார்வையாளருக்குக் கண்முன் இருப்பது இப்பொழுது பதியப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். மாவீரர் நினைவு மனதில் வயப்படும் ஒரு சாதிக்கு ஆதிகால வரலாற்றோடு ஆரம்பிக்க முடியாது. காலம் கடந்தபின் இருப்பை எழுதுதல் மறந்துவிடும். இந்தப் பொழுது எழுதுதல் புலத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.வாழத்துடிக்கும் ஒரு தேசியஇனம். இராட்சதர்களால் அழிக்கப்பட்ட ஒரு இனஅழிப்பு-அந்நியரோடு நின்று இனத்தை அழித்தவர்கள்-தேசியம்-போர்-நிலம்-இருப்பு எல்லாமும் வரும்.மொழி-மன்னர் காலம்-இராமநாதன் காலம் செல்வாகாலம்-பிரபா காலம் -அந்நியர் வருகை-எல்லாமும் வரும். இது நிகழ்காலக் காண்டம்.நாட்டின் இருப்புகள் எழுதப்படும் நிகழ்காலம் இது. காலம் மாறக் களமும் மாறும்-இது இந்தநேரத்து எழுத்து. மக்கள் அழிந்த மறுகணம்.-சதியின் தமிழர் வாழும் சமகாலம்.-இருப்பவர் எங்களையே முதலில் பார்க்கட்டும். போர்ப்பரணிக்கு ஆசிரியத்தாழிசை ஆக்கும். ஆனால் பாவடிவம் எல்லாமும் வரும். இது கதையும் இல்லை. காவியமும் இல்லை. இது தமிழின வதை. ஒரு இனம் சந்தித்த கொடுமை. ஒரு கொடிய சாதியின் கையில் தமிழினம் வந்து இது அழிவுதான் என்ற இராமநாதன் கூற்று இப்பொழுதான் வருகிறது. இந்தக் காலத்தை விட்டு இந்தக் காலத்தை எழுதமுடியாது. காலம் இது காவியமா? ஓவியமா என்று கணக்கில் வரும். சற்றுப் பொறுத்திருங்கள்.-பா வடிவத்தில் இலங்கணப்பிழை இருந்தால் இங்கே பதியவிடுங்கள்.-கருத்துக்களைச் சொல்லுங்கள்- உங்கள் எண்ணம் இந்த கண்ணீர் வரிகளின் பதிவாகும். என்னை உருவாக்கும் உங்களின் கரங்களுக்கு என் வாழ்த்துக்கள்.இதற்கு முன்னர் பேராசிரியர் சர்வசித்தன் எனக்கு நேரிடையாக இந்தக் காவியங்களைப் பற்றி எழுதினார்.. பாடல்களில் பிழை சொல்லவில்லை அவர்.பாதைக்கு வழிசொன்னார். எல்லாம் முடிவில் தொகுக்கப்படும்.-புதியபாரதி