கடவுள் எங்கே?
கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு.
அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.
மிக நன்று. தெளிந்த ஒலிப்பதிவு. நல்ல குரல்வளம். கவிதை பற்றி விமர்சிக்க தகுதியில்லை.
ஆனால் ஓர் ஆலோசனை.
நல்லதொரு பின்னணி இசையோடு இதை ஒலிப்பதிவு செய்து விட்டால் இன்னும் நல்ல உணர்வாக இருக்கும்.
மாவீரர் தின நிகழ்வுகளில் இதை ஒலிக்கவிடலாம். ஏதாவது வானொலிக் கலையகத்தாரோடு அணுகினால் அவர்களைக் கொண்ட நல்ல பின்னணி இசை சேர்க்கலாம். அவர்களும் தமது வானொலியின் இந்த ஒலிவடிவை ஒலிபரப்பலாம்.
வெறும் காட்டில் எறிக்கும் நிலவா? அல்லது உங்கள் நெஞ்சைத் தொடுகின்றேனா?
கருத்துக்களை காணும் தோறும் எழுதுங்கள். என் உணர்வுக்கு நீங்கள் வழங்கும் பொக்கிசம் அதுதான். நன்றியுடன்-புதியபாரதி