குறைசொல்லி மனசுகள்
பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக
நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து
வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும்
மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம்
இப்போதும் இருக்கிறது.
அதே தளராத உறுதி.
அதே உழைப்புக்கான ஊக்கம்.
அதே தன்னலமற்ற தியாகம்.
ஈழத்துக்கவிதை.தயவு செய்து மாற்று மொழிக்கலப்பில்லாத நல்ல சொல்லாட்சியோடு மேலும் முயற்சித்து எழுதுக. விட்டெறிந்து போக இது ஒன்றும் செத்தவீடுகளுக்கு எழுதுகிற புலம்பல்களாக இருக்கக் கூடாது.
சிவம் பரமு
இறுதியில் நேரிசை வெண்பாவில் இருக்கும் 'உறைப்பு' ஏனைய வடிவங்களில் ஏனோ வரவில்லை.
வெண்பாவிலேயே ஓரங்கத்தைத் தர முயற்சிப்பீர்களா?
காவியம் என்று எழுதப்புறப்பட்டால் இன்னின்ன வடிவங்களில்தான் சொல்ல வேண்டுமென்று ஏதாவது நடைமுறைகள் இருக்கலாம். எனக்கு இலக்கியம் பற்றி அவ்வளவு அறிவில்லை. இரசிகன் மட்டுமே.
தமிழ்நெஞ்சம்
அருணாச லக்கோன் தம்பி
வானபொன் இராம நாதன்
வல்லவர் செல்வா, பொன்னர்
மானவர் உரைத்த பின்னும்
வரலாற்றில் தவறு செய்தாய்?
ஏனது அரசி நாடே
எங்களைச் சாக விட்டாய்?
நல்ல அழகாக உறைப்பாக சொன்னீர்கள் ஐயா? காவியம் படைக்கும் உங்களுக்கு நன்றி.