Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)

மின்னஞ்சல் அச்சிடுக PDF
CunningFoxகாகத்திற்கே “அல்வா“ கொடுத்த நரி

ஒருநாள் நவக்கிரகங்களை விருந்துக்கு அழைத்தது.

நவக்கிரகங்களும் நட்சத்திரங்களொன்றுக்கும் தெரியாமல்

தனித்தனியே போய் நரியின் இருப்பிடத்தில் ஒன்று சேர்ந்தன.

நரிக்கோ பெருத்த சந்தோசம்.

நவக்கிரகங்கள் எல்லாம் ஒன்றாய் கூடி

விழுந்துபோன விடிவெள்ளிகளை  மீண்டும்

வானத்துக்கு கொண்டுவர நரியிடம் ஆலோசனை கேட்டன.


நரியோ வந்த வரத்திலேயே ” வரலாறுகளெல்லாம்

நமக்கு வேண்டாம். தன் அண்ணனான ராஜ ராஜாவின் ஆட்சியை

கட்டியெழுப்புவது பற்றி கதைப்போம்“ என்றது.


நவக்கிரகங்கள் ஒன்றையொன்று முகம் பார்த்தன.

“அப்போதான் அடைத்து வைத்திருக்கும் வரிகளை

பரிகளாக்கி ஒடவிடலாம்” என்று நரி ஆசைவார்த்தை கூறியது.


” நவக்கிரகங்களே! நவக்கிரகங்களே!

வரம் நிறைவேற வேண்டி நட்சத்திரங்கள் உங்களிடம்

நேர்த்திக்கு வைத்த சில்லறைகள்

குவியல் குவியலாக இருக்கிறதாமே

அதைப் போய் சீக்கிரம் எடுத்துவாருங்கள்”

என்றது நரி்.


நவக்கிரகங்கள் மௌனமாய் இருந்தன.

நரியோ சத்தமாய் ஊளையிட்டுவிட்டு

தானும் ராஜராஜாவும் வேட்டையாடிய காட்டை

நவக்கிரகங்களுக்கு சுற்றிக்காட்டச் சொல்லி

பன்றிகளுக்கு கட்டளையிட்டது.


போன இடமெல்லாம் நரியாரும்.. ராஜராஜாவும்

சாப்பிட்டுப்போட்டிருந்த எலும்புத்துண்டுகளை

நவக்கிரகங்களும் கண்டிருந்தன.


வரும்வழியில் தன் தினசரி உணவுக்காக

நரியார் அடைத்துவைத்திருந்த விடிவெள்ளிகளில்

சிலவற்றை மட்டும் பன்றிகள்

நவக்கிரகங்களுக்கு காட்டின.


எல்லாம் முடிந்து நரியார்

நவக்கிரகங்களுக்கு நல்ல விருந்தும் கொடுத்து

வழயனுப்பிய பிறகுதான் நட்சத்திரங்களுக்கு

எல்லாமே தெரிந்தன.

நட்சத்திரங்கள் கோபத்தோடு நவக்கிரகங்களுக்கு சொல்லின.

 

விடிவெள்ளிகளின் விடுதலை

எமக்கும் வேண்டும்.

ஆனால்...

வானத்தையே பறித்தெடுக்கப் பார்க்கும்

நரியின் சூழ்ச்சிக்குள்

நாம் சிக்குண்டு போவதை

நட்சத்திரங்கள் நாங்கள் விரும்போம்.

நவக்கிரகங்கள் நீங்களும் விரும்பக்கூடாது.

விடிவெள்ளிகளும்

ஒருபோதும்... ...

விரும்பவே விரும்பாது.”

 

***  *** *** ****

 

தீபிகா.

30-06-2010.

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (3)
அறிவு
3 சனிக்கிழமை, 07 ஆகஸ்ட் 2010 13:39
தாசன்
அறிவில்லாதவர்களுக்கு கொஞ்சம் விளங்காது போல?
best for ever
2 புதன்கிழமை, 21 ஜூலை 2010 17:07
Lankan
I never thought this, wel said. Nari is Nari.
கருத்து
1 ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூலை 2010 09:32
priyan
மிக அழகான முறையில் சொல்லி உள்ளீர்கள்.

வாசகர் கருத்துக்கள், category: "சிறுகதை"

அறிவு நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)
best for ever நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)
கருத்து நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)
ஈழத்தமிழரின் வலிகளில் ஒன்றிது. அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)
அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை) அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)
எதிர் கொள்ளுதல் "எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)
எதிா்கொள்ளுதல் "எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)
சிறுகதைக்கு நன்றி! மெத்தை - சிறுகதை
நன்றி! மெத்தை - சிறுகதை
மனதைத்தொடுகிற எழுத்து. மெத்தை - சிறுகதை

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி