Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Thainadu_eethu_yandrral

அவர்களின் குண்டுகளால்

சுடலையாகிப்போனது நிலம்!!

மொழியறுத்து முண்டங்களாகிச்

சிதைந்தழிந்தன சவங்கள்,

சாம்பல் மேட்டிற்குள்

கனன்று கொண்டிருக்கிறது
இன்னமும் அணையா நெருப்பு !

 

எல்லாத் திசையிலும் முட்டி மோதுகிறது
கேட்பாரற்றுக் கூக்குரலிட்டு
இறந்த அபலைகளின் குரல்,

 

இன்னமும் மீந்திருப்பவை

தாய்நாடு அதுதான் என
நாக்கூசாமல் சொல்கிறார்கள்!!

 

தாய்நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??

எதிரியை வரவேற்கிறவன் அவர்களால்,
எல்லாமிழந்த ஏதிலிகளுக்கும்
பரிமளத்தைலம் பூசுகின்றான்.

தேசத்தை எரித்தவனுக்கும் பொன்னாடை !!
எரிந்து வந்தவனுக்கும் பொன்னாடை !!

 

உயிரோடு புதைந்தவர்களுக்காய் இரங்கற் கூட்டம்
முடிந்த கையோடு போர்வெற்றி புகழப்படுகிறது.

 

தாய் நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??

 

ஒப்பனைக் காரர்கள் சாயம்

பூசத் தொடங்கி விட்டார்கள்!

மனித உடலங்கள் சூடடிக்கப்பட்ட
பூமியில் கொண்டாட்டத்தோடு உலா வருகிறது உலகம்.

புதிய புதிய கடவுள்கள்

இடம் மாறுகின்றார்கள்.

 

மண்மேட்டில் வன்னி

எரிந்தழிந்து போனபோது
பார்த்துக் கொண்டிருந்த தாய்நாட்டு வீரர்கள்
ஆளப் புதைந்த தமிழிச்சியை

புதுவையில் மீண்டும்
இழுத்து வந்து மலர்மாலை

போடுவதாகச் சொல்கிறார்கள்.

 

அதற்காகக்குழல் ஊதுகின்றார்கள்,
எதற்கும் எப்போதும் ஊத வல்ல மகுடிகள்.

 

அதுவும்சரி, இதுவும் சரி என்கிறது அவர்களது அரசியல்.

 

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

 

தமிழெனும் பெயரால்

துடிக்கத் துடிக்க அழிக்கப்பட்டவர்க்காய்....
ஒரு அங்குல ஊதுபத்திகூடக்

கொழுத்திடமுடியா மொழிவல்லோர்கள்
மலர்மண்டமும், மணிமண்டபமும்

தமிழுக்காகப் புதுவையில் கட்டுவோம்
எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.

முகாமிட்ட பிச்சைக்குள் இன்னமும்
கதிகலங்கும் தமிழிச்சிகளின் மூச்சுக்காற்றால்
சுக்கிர திசையாம் அரசிற்கு......

 

அகதிகளைக்காட்டி வியாபாரம்
பெருக்கிடும் காலம் இது என்கிறது இந்தியச் சோதிடம்.

 

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

 

எல்லோரும் புள்ளிவைக்கின்றார்கள்.
தமிழர்களின் சாம்பலில் கோலம் போட......

 

பனிப்பாலையில் வாழத்துடிக்கிற ஒட்டகங்களைப்போல்

தமிழரைக் காக்காமல்,

தமிழைக் காக்கத்துடிக்கிற தேவர்களே...
தேவ கன்னிகைகளே...

 

மாநாடு முடிகிற போது
தமிழன் இருந்த மண்மேடும் தொலைந்து போயிற்றா???
என்றும் ஆராயுங்கள்

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "கவிதை"

nilaave கறுப்பு நிலாக்கள்
மறுவாழ்வு மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...
tamilanuku alivillai கறுப்பு நிலாக்கள்
Mari irukira oorum meethi irukum uravum... மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...
Karuppu Nila கறுப்பு நிலாக்கள்
karuppu nilakkal கறுப்பு நிலாக்கள்
vethanai கறுப்பு நிலாக்கள்
இதயம் கணக்கிறது விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..
Poor kutta Arasankam. போர்க்குற்ற அரசாங்கம்
செம்மொழியான தமிழ்மொழியாம் செம்மொழியான தமிழ்மொழியாம்!!

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி