Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சங்க இலக்கியம் காட்டும் இறையுணர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
இன்றைய தமிழகத்தில் தமிழ்த்தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் ஒரு போலியான பகுத்தறிவு வாதம் பேசி வருவதோடு, தமிழர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றும், ஆரியர்கள் என்று இவர்கள் சொல்பவர்கள் வந்து தமிழ்நாட்டில் பொய்யாக மத நம்பிக்கையையும், வடமொழியாளர்களுடைய இறை வழிபாட்டு முறைகளையும் புகுத்தி விட்டார்கள் எனவும் பொய் பேசித் திரிகிறார்கள். ஆனால், சங்க இலக்கியங்கள், வடமொழியின் ஆதிக்கம் இங்கு வரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட முதற்சங்க இலக்கியங்கள், தமிழரின் வீரம், காதல், கொடைச்சிறப்பு இவை குறித்து மட்டுமில்லாது அவர்களுடைய சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் இவை குறித்தும் சாட்சி கூறுகின்றன.

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும் இலக்கண நூல் தொல்காப்பியம். இந்த இலக்கண நூல், எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணியிலக்கணங்களை விரிவாகப் பேசுகிறது. இந்த இலக்கண நூல் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில் பல சங்க இலக்கியங்கள் அதற்கும் முற்பட்டவை. எழுத்தாலான இலக்கியங்கள் தோன்றுமுன் மனிதர்களின் பழக்க வழக்கங்களும், வாய்மொழி இலக்கியங்களும் தோன்றியிருக்கவேண்டும். குறிப்பாக சங்க இலக்கியங்கள் மனிதர்களின் வாழ்வு முறையைக் கூறுவனவாகவே அமைகின்றன. அதனடிப்படையில்தான் தொல்காப்பியம் பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் முதலியவற்றைப் பொருந்த அமைத்திருக்க முடியுமே தவிர, தொல்காப்பியத்தின் அடிப்படையில் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறை அமைந்திருப்பது சாத்தியமே இல்லை.
Ayyanar
தொல்காப்பியம், அகத்திணையில் மக்களின் வாழ்வை நில அடிப்படையில் பிரித்து விளக்குகிறது. ஒவ்வொரு நிலத்திற்குமான கருப்பொருள் கூறுகளைக் குறிப்பிடுகையில் ' தெய்வம் உணாவே மாமரம் புட்பறை' என்று முதலில் ஒவ்வொரு நிலத்திற்குமான தெய்வத்தை வரையறுத்துவிடுகிறது தொல்காப்பியம்.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'' என்ற தொல்காப்பியச்சூத்திரத்தில், திருமால் என்று அழைக்கப்படும் விஷ்ணு முல்லை நிலத்திற்கும், வேலோன், செவ்வேள் என்றெல்லாம் அழைக்கப் படும் முருகனைக் குறிஞ்சி நிலத்திற்கும் உரிய கடவுளரென்றும் மருத நிலத்தலைவனான இந்திரனையும், நெய்தல் நிலத் தலைவனாக வருணனையும் வானக் கூறப்படுகிறது. மேலும் பாலை நிலத் தெய்வமாகக் கொற்றவை (காளி) இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது/. இதிலிருந்து தொல்காப்பியத்திற்கு முந்திய காலத்திலேயே இத்தெய்வங்களுக்கான வழிபாடு தமிழ் நாட்டில் வேரூன்றியிருந்தமையை அறியலாம். ஆனால், தமிழினத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இரட்டை வேடம் போடும் இன்றைய தலைவர்கள் இவை எல்லாம் வட நாட்டுத் தெய்வங்கள் என்று உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகத்தின் முன்னோடி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லெமூரியாக் கொள்கை உடையவர்கள், லெமூரியாக்கண்டத்தில் தோன்றிய திராவிடர்களே (தமிழர்களே) சிந்து வெளியில் குடியேறினர் என்றும் கூறுகின்றனர். அந்த சிந்து வெளி நாகரிகத்தில் பசுபதி ( அதாவது சிவபெருமான்) வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதே ஆய்வாளர்கள், ஆரியர்கள் என்று கூறப்படுபவர்கள் தீயை வழிபட்டதாகக் கூறுகின்றனரே தவிர உருவ வழிபாடு மேற்கொண்டதாகத் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க தமிழர்கள் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகச் சித்தரிக்கப் படுவது கேலிக்கூத்து. 'பகுத்தறிவு இல்லாத ஆன்மிகம் மூடத்தனம்; ஆன்மிகம் இல்லாத பகுத்தறிவோ அரக்கத்தனம்'. அப்படியிருக்க நாகரிகத்தில் செழித்து அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளும் சிறக்க வாழ்ந்த பண்டைத்தமிழர்கள் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகவா இருந்திருப்பார்கள்?

திருவள்ளுவருக்கு சிலைகள் வைத்து மகிழும் தமிழக முதல்வர் திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்று பத்து எழுதியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார். (அது மட்டும்தானா என்ன.. அவர் எந்தத் திருக்குறளின் படி நடந்துகொண்டார்? 'தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற திருக்குறளைத் தவறாகப் புரிந்துகொண்டு தம் வாரிசுகளுக்குப் பதவி பெற்றுத் தந்ததைத் தவிர!)

கண்ணகி சிலை வைத்து அதற்கு மாலை போட்டு மகிழ்பவர்கள், சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்தில் அப்பொழுதே சிவனுக்கும், முருகனுக்கும் திருமாலுக்கும் கோட்டங்கள் (கோயில்கள்) வைத்து வழிபட்டதையும், மதுரைக்காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் 'இராமாயண,மகாபாரத நிகழ்வுகள்' சுட்டப்படுவதையும் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

பத்துப்பாட்டில் முதல் நூலே 'திருமுருகாற்றுப்படை'அல்லவா? 'முல்லைப்பாட்டு' போருக்குச் சென்ற தலைவன் வருகை வேண்டி தலைவி நெல்லும், மலரும் இறைத்து வழிபட்டதையும், குறிஞ்சிப்பாட்டு தலைவனை வருணிக்கையில் 'அவன் முருகன் போல் அழகன்' என்றும் கூறவில்லையா? புறநானூற்றில் சிவபெருமான் பற்றி 'ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்' என்ற வரி ஈசன் ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்துள்ளதைக் குறிக்கிறது. கலித்தொகையில் சிவன் முப்புரத்தை எரித்த புராண நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
'மடங்கல்போல் சினைஇ மாயம்செய் அவுணரைக்
கடந்து அடுமுன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல் ஒண்கதிர் தெறுதலின்'
என்ற வரிகள் திரிபுரத்தை எரிக்க வந்த சிவனின் முகம் கோபத்தால் சிவந்திருந்ததைப் போல், கதிரவன் சுடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை திருமால் ஆதிசேடனாகிய பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவர் என்பதை
'நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்குப்
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கன்' என்று குறிப்பிடுகிறது.

இன்னும் பற்பல பத்துப்பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்களில் கடவுளை நெல்லும் மலரும் தூவி வழிபட்டது குறித்தும் பற்பல கடவுளர்கள் குறித்த செய்திகளும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று ஒரு சங்கப்புலவர் இருந்தமை, அக்காலத்தில் மகாபாரதம் தமிழ்நாட்டிலும் பரவி இருந்ததை விளக்குகிறது. இது தவிர, ஏனைய பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், மணிமேகலை,குண்டலகேசி, நீலகேசி போன்ற பல நூல்கள் சைவம், வைணவம் தவிர பௌத்தம், சமணம் ஆகிய அனைத்து மதங்களும் பண்டைத்தமிழகத்தில் வழங்கிவந்த செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. இச்சான்றுகள் சங்க காலத்தில் ஆன்மிகமும் உயரிய இடத்தைப் பெற்றிருந்ததை நாம் நன்கு உணர முடிகிறது.
 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (4)
மதம் இருக்குமட்டும் சாதி இருக்கும்
4 புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010 15:42
ஆதித்ய இளம்பிறையன்
மதம் இருக்குமட்டும் சாதி இருக்கும். சாதி இருக்கும் வரை சமத்துவம் நிலவாது. சமத்துவம் இல்லாத சமுதாயம்/இனம் நிலைக்காது. தமிழினம் நிலைக்க வேண்டுமானால் சமத்துவம் நிலவ வேண்டும். சமத்துவம் நிலைக்க சாதி ஒழிய வேண்டும். சாதி ஒழிய சாமி ஒழிய வேண்டும். வழிபாடு வேண்டுமென்றால் அது இயற்கை வழிபாடாகத்தான் இருக்க வேண்டும். பகவத் கீதை காட்டும் வர்ணாசிர வழிபாடாக இருக்க கூடாது.

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!
Reply to Kannan Kandasamy: God Is there
3 வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2009 20:08
prabha
God is there. People who say there is no GOD also heart of heart believe GOD. Particularly when you face a problem, fall down or have pain- you think of GOD. Billions of people who believe in GOD are not fools. Athists are very less. Even if you say 'சாமியில்லை' it is just for the sake of differentiating you from others or to attract others. Those who say that they do not believe in GOD or Hypocrats.

GOD is there , GOD is there, GOD is there.

The Article is Really Very Good. Keep Writng on Spiritual Matters
சிந்திக்க வழிவகுக்கும் கட்டுரை
2 வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2009 20:48
சர்வசித்தன்
மனிதன் தன்னைப்பற்றியும் தன்னைச் சுற்றிலும் இருப்பன/இருப்பவர் குறித்தும் சிந்திக்க ஆரம்பித்தபோது அவனுக்கு இந்த உலகும் அதனோடியைந்த அனைத்தும் வியப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்! அதுவே தன்னிலும் மேலான ஏதோ ஒன்று (ஆற்றல்) இத்தனையையும் செய்யும் வலிமையினைக் கொண்டுள்ளது என எண்ணியிருப்பான். அதன் காரணமாகத் தன்னிலும் உயர்ந்த/ஆற்றல் படைத்த அதனை வழிபட முற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதுவே காலப்போக்கில் தெய்வ வழிபாடாகப் பரிணமித்திருக்கிறது.
எனவே, “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி நம் தமிழ்க்குடி” என்று மேடைதோறும் வாய்கிழியக் கூச்சலிடும் நவீன “தமிழினத் தலையர்”களது பகுத்தறிவு, தெய்வத்தைக்கூட ஆரியருக்கு முன்பே நம் தமிழ்க்குடி வழிபட ஆரம்பித்திருக்கலாம் என எண்ணாது விட்டது ஏனென்று தெரியவில்லை. புதிதாக எதனையாவது கூறி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் யுத்தியாக இது இருக்கலாம்.
இந்தக் கட்டுரையினைத் தொடர்ந்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்து எழுதுவது பயந்தரும்.
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
சாமியில்லை
1 புதன்கிழமை, 28 அக்டோபர் 2009 05:57
கண்ணன் கந்தசாமியில்லை
சாமியில்லை சாமியில்லை

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

arumaiyana karuthu அன்பே தீர்வு
நல்லதொரு புத்தகம் பற்றிய அறிமுகம் ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
karuvelanizhal ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
manggai.blogspot.com ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
Well done திராவிடன் & Eelam ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
Aiya Vannkam ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
ரிக் வேதம் ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
கண்டுபிடிக்கவே முடியாத களவு ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
Do not spread wrong messages ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
திராவிடத்தலைவர்களின் போலி முகங்கள் ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி